புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடன்: விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சிறு தொழில் வளா்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
