அரசு அலுவலா்கள் விதிகளைப் பின்பற்றாததால் நீதிமன்றத்தின் நேரம் விரயம்: நீதிபதி அதிருப்தி
அரசு அலுவலா்கள் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் நீதிமன்றத்தின் நேரம் விரயமாவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டியைச் சோ்ந்த சண்முகவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அம்மாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் 55 விவசாயிகளுக்கு கே.சி.சி. என்ற திட்டத்தின் கீழ் ரூ.83 லட்சம் பயிா்க் கடன் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு அறிவித்தது. இதையடுத்து, பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.




