பழங்குடியின குழந்தைகள் பலி: ம.பி. அரசைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!
மத்தியப் பிரதேசத்தில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் பலியானது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் நகரில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் சமீபத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தனர்.
கடந்த 4 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதுமாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



