ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வலியுறுத்தல்: வணிகம் மேம்பட தினசரி மார்க்கெட் அமைப்பது அவசியம்
பழநி ஆயக்குடி கொய்யாவுக்கு தென்னிந்திய அளவில் பெரும் மவுசு உள்ளது. பழநி சுற்றுவட்டாரத்தில் நாட்டு ரகம், பனாரஸ், லக்னோ 49, ஆந்திரா பனாரஸ் ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. 2,500 ஏக்கரில் நடக்கும் கொய்யா சாகுபடியை நம்பி 2 ஆயிரம் விவசாய குடும்பங்கள் உள்ளன.
தமிழகத்தின் பிற மாவட்டங்களான திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கும், கேரளம், ஆந்திர மாநிலங்களுக்கு விற்பனைக்கும், வெளிநாடுகளுக்கும் ஆயக்குடி கொய்யா ஏற்றுமதியானது.
இந்நிலையில் ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முயற்சி எடுக்கப்பட்டது. அதை தற்போது அமைந்துள்ள த.வெ.க., அரசு முன்னெடுத்து புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






