அரசு மின்சார பஸ்சில் தீ உயிர் தப்பிய 18 பயணியர்
பெங்களூரு: விராஜ்பேட்டில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட அரசு மின்சார பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, 18 பயணியர் உயிர் தப்பினர்.
குடகு மாவட்டம், விராஜ்பேட்டில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் மாலை கே.எஸ்.ஆர்.டி.சி., மின்சார பஸ் புறப்பட்டது. மைசூரு - ஹூன்சூர் சாலையில், பிலிகெரே அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, பஸ்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், பிரேக் செயலிழந்தது. பின் சக்கரத்தில் இருந்து அடர்த்தியான புகையுடன், தீப்பற்றியது.

