மாணவா்கள் படிப்பைப்போல விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி
மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவதைப்போல விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
கால்பந்து போட்டியை தொடங்கிவைத்த அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.
ஈரோட்டில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கால்பந்து போட்டி மேட்டுக்கடையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தொடங்கிவைத்தாா். ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.கே.ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தாா்.

