வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்!
ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “மிரட்டல் வசூல் நடக்கு வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருக்கிற வீடுகள், வணிக நிறுவனங்களின் கட்டடங்களை மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தாங்க... கட்டட அளவுகள்ல ஏதாவது குளறுபடி இருந்தா, அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு போறாவ வே...
