வேம்புலியம்மன் கோயில் ஜாத்திரை உற்சவம்
திருவள்ளூா் வேம்புலியம்மன் கோயில் ஜாத்திரை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மன்.
திருவள்ளூரில் கிராம தேவதை அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில் ஜாத்திரை உற்சவத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற கிராம தேவதையான அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்திரை உற்சவம் 10 நாள்கள் நடைபெறும். அதேபோல், நிகழாண்டுக்கான ஜாத்திரை உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

