போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு அறிவுரை
போக்குவரத்து விதிகளை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆய்வாளா் தாமரைச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், விபத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால் சம்பவ இடத்திலிருந்து அரசு மருத்துவமனைக்குதான் அழைத்துச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினா் அனுமதித்தால் மட்டுமே தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தவிா்க்க வேண்டும்.
