வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதா; 31 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு
புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இந்த மசோதாக்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பார்லி., கூட்டுக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. தற்போது இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. பீஹாரின் பெட்டியா தொகுதி பாஜ எம்பி சஞ்சய் ஜெயஸ்வால் இந்த குழுவிற்குத் தலைமை தாங்குவார்.

