பிரான்ஸ் நாட்டில் திறக்கப்பட்ட முதல் இந்து கோயில்! BAPS அமைப்பு வரலாற்றுச் சாதனை
பிரான்சின் பாரிஸில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது. BAPS அமைப்பின் மகாந்த் சுவாமி மகாராஜ் பிரதிஷ்டை செய்தார்.
பிரான்ஸ் நாட்டின், பாரிஸில் உள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸில், அந்நாட்டின் முதல் இந்து இன்று (6ஆம் தேதி) திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மகாந்த் சுவாமி மகாராஜ், வேத மந்திரங்கள் ஓத பிரதீஷ்டை செய்துவைத்தார்.
காலை 6:45 மணி முதல் 9:00 மணி வரை, வேத மந்திரங்கள் முழங்க மற்றும் மகாபூஜையுடன் நடைபெற்ற இந்த பிரதீஷ்டை நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர். இந்த ஆலயத்தில், ஸ்ரீ அக்ஷர்-புருஷோத்தம் மகாராஜ் (பகவான் ஸ்ரீ சுவாமிநாராயண் மற்றும் குணாதீதானந்த் சுவாமி); பகவான் ஸ்ரீ ராதா-கிருஷ்ணா; பகவான் ஸ்ரீ சீதா-ராம், ஸ்ரீ அனுமன் மற்றும் லட்சுமணன்; பகவான் சங்கர் மற்றும் பார்வதி, ஸ்ரீ கணேசர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயன்; சுவாமி ஸ்ரீ ஐயப்பன்; மற்றும் பகவான் ஸ்ரீ பத்மாவதி-வெங்கடேஸ்வரர் ஆகியோரின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.

