தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் பாதிரியார்களாக நியமனம்
கம்பம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முதன் முறையாக தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள், பாதிரியார்களாக நியமிக்கப்பட்டனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கருப்பசாமியின் மகள் விஜயா 48. இவர் வாகவரை சி.எஸ்.ஐ., சர்ச்சில் மணியக்காரராக பணியாற்றினார்.
மூணாறு லட்சுமி தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் அய்யப்பன் மகள் இந்திரா 49. இவர் மறையூர் சர்ச் நிர்வாகத்தின் கீழ் இரிஞ்சிகுடா என்ற ஊரில் செயல்படும் மகளிர் தொழிற் கல்வி நிலையத்தில் பணியாற்றினார்.


