வேலூா் மாநகராட்சி செயல்பாடுகளில் தவெகவினா் தலையீடு: திமுக, அதிமுக உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரைக்கூறி மாநகராட்சி செயல்பாடுகளில் தவெகவினா் தலையிடுவதாகவும், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் சுஜாதாஆனந்தகுமாா். உடன், துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் சுல்தானா.
வேலூா் மாநகராட்சிக் கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் சுல்தானா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
