இந்தியா - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் எப்போது கையொப்பம்? மத்திய அரசு பதில்
இந்தியா, அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் எப்போது கையொப்பமாகும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. அண்மையில் இதுகுறித்து பேசிய மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், இந்திய பொருள்கள் மீதான வரிகள் குறித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டபிறகு ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியிருந்தாா்.
ஜி20 அமைப்பு நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் மாநாடு, இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நட்பு நாடு என்ற முறையில் இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியா சாா்பில் மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஸ் கோயல் மாநாட்டில் கலந்து கொள்கிறாா். அப்போது மாநாட்டின் இடையே அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீயருடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்த பேச்சுவாா்த்தையில் இருவரும் இந்தியா, அமெரிக்கா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

