உயிர் பிழைத்தது எப்படி? 9 நாள்களுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் மீட்கப்பட்டவரின் ஆச்சரிய தகவல்!
உயிருடன் இருந்தது எப்படி என்பது குறித்து 9 நாள்களுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் மீட்கப்பட்டவரின் ஆச்சரிய தகவல் வெளியானது.
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, தான் ஹரே கிருஷ்ணா எனும் மகா மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்ததாக தன்னை மீட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.
நிச்சயம் மீட்புப் படை வீரர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கடந்த 9 நாள்களும் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்றே உச்சரித்துக் கொண்டேயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.


