இந்தியாவின் எச்சரிக்கையை ஐரோப்பா புறக்கணித்தது: பெல்ஜியம் பிரதமர் கவலை
புதுடில்லி: பொருளாதார சார்புநிலை குறித்து இந்தியா முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கையை ஐரோப்பா புறக்கணித்து விட்டது என்று பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் டி வேவர், டில்லியில் நடந்த தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது; ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மிக நீண்ட காலமாக நமது சந்தைகளில் உற்பத்தி செலவை விட குறைவான விலையில் அதிகப்படியான உற்பத்தி திறன் கொட்டப்படுகிறது. இது உள்நாட்டு தொழிலகளை பாதித்தது. வெளிநாட்டு விநியோகஸ்தர்களை அதிகளவில் சார்ந்திருக்கும் நிலையை ஐரோப்பாவிற்கு ஏற்படுத்தியது.

