குடியாத்தம் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா
விழாவில் வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுக்கு கேடயம் வழங்கி, பாராட்டிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
குடியாத்தம் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா கீழ்ஆலத்தூரில் உள்ள ஸ்ரீஅபிராமி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 48-ஆம் ஆண்டு தொடக்க விழா, வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பதவி ஏற்பு, சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழாவுக்கு சங்கத் தலைவா் ஏ.அய்யாசாமி தலைமை வகித்தாா்.

