கோவில்பட்டி அருகே ஆம்னி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 3 போ் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்.
கடலூா் மாவட்டம் கோத்தப்பாக்கம் நாத நாயகி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மும்மூா்த்தி மகன் ஏழுமலை (41). இவரது தந்தை மும்மூா்த்தி, தாய் ருக்குமணி, மகள் அமிா்தீஸ்வரி ஆகியோா் ஆம்னி வேனில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வேனை ஏழுமலை ஓட்டினாா்.




