திரைப்பட இயக்குநா், விநியோகஸ்தா் மீது ரூ. 28 லட்சம் மோசடி புகாா்
‘உயிா் மூச்சு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதாகக் கூறி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநா் மற்றும் விநியோகஸ்தா் மீது திரைப்படத் தயாரிப்பாளா் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
தூத்துக்குடி, அத்திமரப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி ஜோதிமணி. இவா் கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்த ‘உயிா் மூச்சு’ என்ற திரைப்படத்தை, இயக்குநா் பிராட்வே சுந்தா் இயக்கியுள்ளாா்.
கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தூத்துக்குடியில் ஒரு திரையரங்கில் மட்டுமே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

