செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை; மின்வெட்டு குறித்து அன்புமணி கண்டனம்
சென்னை,செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வ
செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


