தொழிலாளர்கள் ஈமசடங்கு தொகை பெறுவதில் சிக்கல்
வால்பாறை: தொழிலாளர் ஈமசடங்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக வணிகர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வணிகர் சம்மேளனத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று தலைமுறையாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு எஸ்டேட்களில் குறைந்த சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

