இப்படி கொம்பு சீவலாமா?
'கட்சியில் மறைமுகமாக இருக்கும் கோஷ்டி பூசலை, இவர் துாண்டி விடுகிறாரே...' என, மத்திய பிரதேச மாநில முன்னாள் பெண் அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான இமர்த்தி தேவி குறித்து கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது.
ம.பி., முதல்வர் பதவியை தான் சிந்தியா எதிர்பார்த்தார். ஆனால், அவரை மத்திய அமைச்சராக்கி டில்லிக்கு அனுப்பி விட்டனர். சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான இமர்த்தி தேவியை, முதல்வர் மோகன் யாதவ் ஓரங்கட்டி வைத்துள்ளார்.

