தந்தை உடலை வைத்து பிள்ளைகள் போராட்டம்
பாகல்கோட்: சொத்துகளை சமமாக பகிர்ந்தளிக்கும்படி வேண்டி, தந்தையின் உடலை தாலுகா அலுவலகம் முன் வைத்து, பிள்ளைகள் போராட்டம் நடத்தினர்.
பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின் அவடி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா வாகென்னவரா, 76. இவருக்கு இரண்டு மனைவியர்.
முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஐந்து மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எல்லப்பா வாகென்னவராவுக்கு, வீடு, நிலம் போன்ற சொத்துகள் உள்ளன.
