நீர்நிலைகளைச் சீரழித்து, மண் சுரண்டலுக்கு அனுமதிப்பதா? - வேல்முருகன் கேள்வி
சென்னை,மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் த
மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில், விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி, மண்ணூர், ஆலம்பூண்டி, சாணிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் வண்டல் மண், கிராவல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீர்நிலைகளின் இயற்கை அமைப்பு சிதைவது ஏன்? நீர்நிலைகளைத் தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்த வேண்டிய நடைமுறை, தற்போது அவற்றின் இயற்கையான தரைப்பரப்பையே மாற்றும் அளவுக்குச் சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பது மிகுந்த கவலைக்குரியது.




