காட்சிப்பொருளான சோதனை சாவடி மாவட்ட எல்லையில் சிக்கல்
உடுமலை: உடுமலை அருகே, மாவட்ட எல்லையில், காட்சிப்பொருளாக மாறியுள்ள சோதனை சாவடிக்கு, போலீசார் நியமித்து, குற்றத்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
திருப்பூர்–கோவை மாவட்ட எல்லையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுார் அமைந்துள்ளது. தளி போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள இப்பகுதியை ஒட்டி, பல்வேறு நீராதாரங்கள், மலையடிவாரத்தில் அமைந்துள்ளன.
நீராதாரங்களில் இருந்து, கனிம வளங்கள் கடத்தலை தடுக்க தேவனுார்புதுாரில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.

