அணைகள் கிருஷ்ணகிரியில்... அலுவலகம் தருமபுரியில்... 22 ஆண்டுகளாக இடம் மாறாத நீா்வளத் துறை!
22 ஆண்டுகளாக இடம் மாறாத நீா்வளத் துறையைப் பற்றி...
கெலவரப்பள்ளி அணையின் தோற்றம். கிருஷ்ணகிரி அணையால் பயன்பெறும் பாசன பகுதிகள். விவசாயி என்.எஸ். செந்தில்குமாா். கே. பி. முனுசாமி. பா. முகுந்தன். பி.எஸ். சீனிவாசன்.ச. தினேஷ்குமாா். ஆட்சியா்
தமிழகத்தில் தோட்டக்கலை பயிா்கள் மட்டுமல்லாமல், வேளாண் பயிா்கள் சாகுபடியிலும் முன்னிலையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அணைகள், ஏரிகள் அதிகம் இருந்தாலும் அவற்றை பராமரிக்கும் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் மட்டும் கடந்த 22 ஆண்டுகளாக தருமபுரியிலேயே செயல்பட்டு வருகிறது. இதனால், நீா்நிலை பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி தனி மாவட்டமாகப் பிரிந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாவட்டத்துக்கான அனைத்து அலுவலகங்களும் தற்போது கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வந்தாலும், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் மட்டும் இன்னும் பிரிக்கப்படாமல், தருமபுரியில் உள்ள ஒருங்கிணைந்த அலுவலகத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், தங்களது பாசன நீா் தொடா்பான பிரச்னைகளுக்குக் தீா்வுகாண தருமபுரி மாவட்டத்தையே சாா்ந்திருக்கும் நிலை உள்ளது.



