உதகையில் வரி செலுத்தாத 10 சுற்றுலா வாகனங்கள் பறிமுதல்: உரிமையாளா்களுக்கு ரூ.1.38 லட்சம் அபராதம்
உதகையில் வரி செலுத்தாத 10 சுற்றுலா வாகனங்களைப் பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், வாகன உரிமையாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 250 அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் மேக்சி கேப், சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.
குறிப்பாக, மேக்சி கேப் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களுக்கு வாழ்நாள் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.