20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை... கணவர் உள்பட 13 பேர் மீது வழக்கு
லண்டன்20 ஆண்டுகளாக மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கணவர் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.இங்கிலாந
20 ஆண்டுகளாக மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கணவர் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வடக்கே மான்செஸ்டர் நகரில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. 60 வயதுடைய கணவர் ஒருவர், அவருடைய மனைவிக்கு 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, மான்செஸ்டரில் உள்ள மான்செஸ்டர் மின்ஷூல் ஸ்ட்ரீட் கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில், 5 பாலியல் வன்கொடுமைகள், 3 பாலியல் கொடூர தாக்குதல்கள், 6 பாலியல் தாக்குதல்கள் மற்றும் மனைவியின் ஒப்புதல் இன்றி அவருடைய ஆபாச புகைப்படங்களை பகிர்தல் என அந்த நபருக்கு எதிராக 60 குற்றச்சாட்டுகள் உள்ளன.



