தென்னிந்தியாவிலிருந்து முதல் 'அழகி'
'அழகிப் போட்டிக்காக நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாராகி வந்துள்ளேன். இந்தக் கிரீடத்தை எனது மாநிலமான கேரளத்துக்குக் கொண்டு வருவதிலும், எனது சொந்த ஊரை உலகுக்கு அறிமுகப்படுத்துவதிலும், அதை 'மிஸ் யுனிவர்ஸ்' மேடைக்குக் கொண்டு செல்வதிலும் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என்கிறார் கேரளத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயதான கஸியா லிஸ் மெஜோ.
இவர் அண்மையில் ஜெய்ப்பூரில் ஜீ ஸ்டூடியோஸில் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில், 52 போட்டியாளர்களைத் தோற்கடித்து, 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து 'அழகி' பட்டம் பெற்றிருக்கும் முதல் அழகியான கஸியா, நவம்பர் மாதம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெறும் 75-ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள கஸியா லிஸ் மெஜோ, கேரளத்தின் மாவேலிக்கராவைச் சேர்ந்த சட்டம் படிக்கும் மாணவி. இவர் நடிகையும்கூட.
