2040-க்குள் விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்ப திட்டம்: பிரதமா் மோடி
2040-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்ப திட்டமிடப்பட்டு இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீசில் முதல் சா்வதேச விண்வெளி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி வியாழக்கிழமை பங்கேற்று உரையாற்றியதாவது:
பல நூற்றாண்டுகளாக விண்வெளி, மக்களின் கற்பனைத் திறனுக்கு உத்வேகம் அளித்தது. தற்போது பருவநிலை, பயிா்கள் முதல் பெருங்கடல், சமூகங்கள் வரையில் பூமியில் உள்ள வாழ்க்கையை வடிவமைக்கிறது. விண்வெளி அளிக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. அதில் நமக்கு கூட்டு பொறுப்புள்ளது.


