ரூ.200 லஞ்சம் பெற்றுக் கொண்டு பிணவறையில் ரவுடிகளை அனுமதித்ததாக புகார்..!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறையில் 200 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு ரவுடிகளை அனுமதித்ததாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களை செல்போனில் வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் பிணவறை நிரந்தர ஊழியர் சீனிவாசன், ரவுடிகள் சதீஷ்குமார், தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. வனிதா மலர் அளித்த புகாரின் பேரில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆனந்த் என்பவரின் உடலை பார்ப்பதற்காக கிரீன் பாய்ஸ் நிறுவன ஒப்பந்த பணியாளர் சங்கர் என்பவர் 200 ரூபாய் லஞ்சம் வாங்கியபின் 2 பேரையும் பிணவறைக்குள் அனுமதித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

