கர்நாடகாவில் அதிகரிக்கும் வெயில் புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்
பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. மக்களுக்கு மழைக்காலத்துக்கு பதிலாக, கோடை கால அனுபவம் ஏற்படுகிறது. செப்டம்பர் 16 வரை, இதே சூழ்நிலை நீடிக்கும் என, வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வல்லுநர்கள் கூறியதாவது:
பொதுவாக செப்டம்பரில் குளிர்ச்சி, மேகமூட்டமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஆனால் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கோடைக்கால அனுபவத்தை ஏற்படுத்துகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

