கொளத்துார் தொகுதியில் தோல்வியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: 'சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது' என அறிவிக்க கோரி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின், த.வெ.க., வேட்பாளர் பாபுவிடம், 8,000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு:



