மீனாட்சி கோவிலில் விதி மீறி இளையராஜாவுக்கு சலுகையா?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இசையமைப்பாளர் இளையராஜாவை, முதல் பூஜைக்கான மணி ஒலிக்கும் முன்பே மூலஸ்தானத்திற்கு அழைத்துச்சென்ற பெண் எஸ்.ஐ.,யால் சர்ச்சை எழுந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில், தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள் சித்தி விநாயகர் சன்னிதி அருகே காத்திருப்பர். அதிகாலை, 5:00 மணிக்கு மணி ஒலித்ததும், அம்மனை தரிசிக்க மூலஸ்தானத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தொடர்ந்து, திருவனந்தல் பூஜை நடைபெறும். இந்த நடைமுறை நுாற்றாண்டுகளை தாண்டி பின்பற்றப்படுகிறது. திருவனந்தல் பூஜையை காண்பதற்காகவே பக்தர்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி, தினமும் தரிசித்து வருகின்றனர்.

