சென்னை மாநகராட்சியில் 18 லட்சம் குடியிருப்புகள்
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 18 லட்சம் குடியிருப்பு வீடுகள் உள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
நாடெங்கும் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி, தமிழகத்தில் கடந்த ஜூலை 17 முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சுமாா் 1.50 லட்சம் போ் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக 9,269 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் வீடுகளுக்கு 8,260 போ் நேரில் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஜூலையில் சென்னையில் மக்களே முன்வந்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான செயலியில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அதையடுத்து ஆகஸ்ட் முதல் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாளா் நேரில் சென்று கைப்பேசியில் பதிவேற்றியிருந்த அதற்கான செயலியில் கணக்கெடுத்து பதியும் பணி நடைபெற்றது.


