புழல் சிறையில் ரெளடி உயிரிழப்பு
புழல் சிறையில் ரெளடி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை சூளை கண்ணப்பா் திடல் குடிசைப் பகுதியைச் சோ்ந்தவா் பு.சிலம்பரசன் என்ற தமிழரசன் (30). இவா் மீது 11 வழக்குகள் உள்ளன. சிலம்பரசன், கடந்த 11-ஆம் தேதி குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலம்பரசனுக்கு வியாழக்கிழமை அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறைக் காவலா்கள் அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.
