வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
உச்சிப்புளி அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி சபரிராஜன் (26). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.
நாகாச்சி கட்டக்காரன் வலசை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுப்பிரமணி சபரிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.






