ஒரு வழி பாதையான பஜார் பகுதி: ஆக்கிரமிப்பில் அருப்புக்கோட்டை அவதிப்படும் மக்கள்
அருப்புக்கோட்டை:அருப்புகோட்டையில் முக்கியமான பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாலும், முக்கியமான பஜார் பகுதிகள் ஒரு வழி பாதையாக மாறும் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மக்கள் சிரமப்படுவதுடன் போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது.
அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, காசு கடை பஜார், திருச்சுழி ரோடு, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கூடிக் கொண்டே செல்கிறது. ரோடு ஓரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நடைபாதை கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பும் உள்ளது. இதனால், டூ வீலர்களில் கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டி உள்ளது. இந்த வழியாக வரும் பஸ்கள் ஊர்ந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் துறை,டிராபிக் போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகள் மெத்தனமாக இருப்பதுடன் எதையும் கண்டு கொள்வது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த துறைகள் ஒன்றிணைந்து பேருக்கு கடைகளில் சன் ஷேடுகளை மட்டும் அகற்றி தன் கடமைகளை முடித்துக் கொண்டன. முக்கியமாக அண்ணாதுரை சிலை பகுதியில் ரோட்டின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்பால் ஒரு வழி பாதையாக மாறி வருகிறது.

