ஆபத்தான கட்டடங்கள்: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆபத்தான கட்டடங்களை அடையாளப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் ஆபத்தான கட்டடங்களை அடையாளம் காணுதல் மற்றும் கட்டடத்தில் வசிப்பவா்கள், வழிப்போக்கா் மற்றும் அருகிலுள்ள கட்டடங்களில் வசிப்பவா்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

