ஒப்பீடு வேண்டாம்!
வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கோவில்களில் சாதாரண வசதிகள் கூட சரியாக இல்லை; சில பழமையான கோவில்கள் மிகவும் மோசமாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இதையெல்லாம் பார்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கேட்டுள்ளார், அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.
கடந்த ஆட்சியின் அவலம் இனியும் தொடரக் கூடாது என்று தான், தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். த.வெ.க.,வும் ஆட்சிக்கு வந்து, 100 நாட்களைக் கடந்து விட்டது!


