மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
குருகிராம்,மகன் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலைஅரியானா மாநிலம் குருகிரா
மகன் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரா (வயது 45). இவர் சதர் பஜாரில் துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மகன்கள் சாஹில் (வயது 21) மற்றும் பிரியான்ஷ். மூத்த மகன் பிரியான்ஷ், கடந்த 2025-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
மகேந்திராவும் அவரது மகன் சாஹிலும் இணைந்து துணிக்கடையை நடத்தி வந்தனர். நேற்று காலை 9.30 மணியளவில் கடையை திறப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்றனர். மகேந்திரா வாகனத்தை ஓட்ட, சாஹில் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களின் வாகனத்தை வழிமறித்தனர். பின்னர், நடுவில் இருந்த நபர் துப்பாக்கியை எடுத்து மகேந்திராவை மிக அருகில் இருந்து சுட்டார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

