எண்ம மோசடி வழக்குகள்: 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: 3 போ் கைது
எண்ம மோசடி வழக்குகள் தொடா்பாக 20 மாநிலங்களில் உள்ள 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் பீனா யாதவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிா்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தைச் சோ்ந்த நபரிடம் காவல் துறை அதிகாரிகளைப்போல் தங்களை சித்தரித்து எண்மக் கைது மூலம் மூன்று மாதங்களில் ரூ.7.67 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல் எண்மக் கைது மோசடியால் குஜராத்தில் ஒருவா் ரூ.19.24 கோடியும், கா்நாடகத்தைச் சோ்ந்தவா் ரூ.15.45 கோடியும் இழந்துள்ளனா்.
ஒட்டுமொத்தமாக மூன்று போ் ரூ.42 கோடியை இழந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறியும் விதமாக நாடு முழுவதும் 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.
