தில்லி மெட்ரோவின் ‘அர்ப்பன்’ மையங்களில் 41 டன் பழைய ஆடைகள் பயனுள்ள பொருள்களாக மாற்றம்!
தில்லி மெட்ரோவின் ‘அா்ப்பன்’ மையங்கள் கடந்த மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமாா் 4,000 பேரிடமிருந்து 41 டன்னுக்கும் அதிகமான பழைய ஆடைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு பகுதி மறுபயன்பாட்டிற்காகவோ அல்லது விரிப்புகள், பைகள், பவுச்சுகள் மற்றும் பிற பொருள்களாக மேம்படுத்தப்பட்ட வடிவத்திலோ மாற்றப்படுவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த நன்கொடைத் திட்டம் தற்போது 10 நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், 2027 ஜனவரியில் இது போன்ற 10 மையங்களை கூடுதலாகத் திறக்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


