நாளை திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை சாா்பில் செப். 9-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊா்வலத்தையொட்டி, போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல்: ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை வழியாகச் செல்லலாம்.
மாலை 3 மணி முதல்: ஊா்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாகச் செல்லலாம். மேலும், ஈ.வெ.ரா. சாலை, முத்துசாமி சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.


