20 ஆண்டுகளாக கிடைக்காத வாய்ப்பு... மீண்டும் யு20 ஆசியக் கோப்பையில் களமிறங்கும் இந்தியா
தாஷ்கண்ட்,யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய யு20 அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது. வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியாதாஷ்க
யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய யு20 அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது.
தாஷ்கண்டில் நேற்று நடைபெற்ற குரூப் பி தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.
போட்டியின் 25-வது நிமிடத்தில் டேனி மெய்தெய் லைஷ்ரம் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். 60-வது நிமிடத்தில் விஷால் யாதவ் அசத்தலான முறையில் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். தொடர்ந்து மாற்று வீரராக களமிறங்கிய முகமது அர்பாஷ் 79-வது நிமிடத்தில் கோல் அடிக்க, இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.

