மெய்த்தன்மை சான்று கேட்பு விவகாரத்தால் மக்கள் அதிருப்தி! திருப்போரூர் தாலுகாவில் மட்டும் இந்த நடைமுறை
திருப்போரூர்:திருப்போரூர் தாலுக்காவில் நடைமுறையில் உள்ள கிராம நத்தம் அனைத்து பட்டாவிற்கும் மெய்த்தன்மை சான்று கேட்பதால்,
பத்திரப்பதிவு செய்வதிலும், வங்கியில் கடன் தொகை பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசு வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பட்டாக்கள், உண்மையான பட்டாவா அல்லது போலியானவையா என, வட்டாட்சியர் மீண்டும் சான்று கேட்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

