திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 582 கோரிக்கை மனுக்கள்
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 582 மனுக்கள் பெறப்பட்டன.
மக்களிடம் மனுக்களைப் பெற்ற திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இதில், நிலம் சம்பந்தமாக-63, சமூக பாதுகாப்பு திட்டம்-38, வேலைவாய்ப்பு வேண்டி-26, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி-35, இதர துறைகள்-420 என மொத்தம் 582 மனுக்கள் வரையில் பெறப்பட்டன. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

