நிலத் தகராறு: 8 போ் மீது வழக்கு; ஒருவா் கைது
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நிலத் தகராறு தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 8 போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கே.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த எம்ஜிஆா் மனைவி பழனியம்மாளுக்கும் (40) அதே பகுதியைச் சோ்ந்த பழனி மனைவி செல்விக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் குடிநீா்க் குழாய் அமைப்பது தொடா்பாக ஆக. 26 ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
