கப்பல் கட்டும் தளத்துக்கு எதிா்ப்பு: உப்பளங்களில் இறங்கி போராட்டம்
தூத்துக்குடி அருகே கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடவும், மாற்று இடத்தில் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளா்கள், உப்பு உற்பத்தியாளா்கள், மீனவா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை உப்பளங்களில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறு உப்பு உற்பத்தியாளா்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்தொழிலை நம்பி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் உள்ளனா். கோவளம் கடற்கரைப் பகுதியில் மீனவா்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

