பயணிகள் பற்றி கவலையின்றி பஸ் ஊழியர்கள் வாக்குவாதம்
கோவை: தனியார், அரசு பஸ்களிடையே 'டைமிங்' பிரச்னை என்பது தொடர் கதையாக உள்ளது. ரோட்டில் பஸ்களை நிறுத்தி வாக்குவாதம் செய்பவர்கள், அடிதடியிலும் இறங்குவது வழக்கமாகியுள்ளது.
அசுர வேகத்தில் செல்லும் பஸ்கள் சில சமயங்களில் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது. ஆக.22ல் சிவானந்தா காலனி செல்லும் 5 வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ், தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்றன.
ராமநாதபுரம் சந்திப்பு அருகே தனியார் பஸ்சை முந்த முயன்ற அரசு பஸ், வளைவில் இருந்த பெட்ரோல் பங்க்கினுள் நுழைந்து பெண் ஒருவர் மீது மோதியது. அவர் காயத்துடன் தப்பினார்.


